Popular Posts

Monday, November 22, 2010

இறைத் திருத்தூதர் இஸ்மாயில் (அலை)

இறைத் திருத்தூதர் இஸ்மாயில் (அலை) அவர்கள் 
இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராக இருந்தார்கள் !


(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! 

நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

-சங்கைமிக்க இறைவேதம் (19:54)

அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்;

தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

-சங்கைமிக்க இறைவேதம் (19:55)